Sunday, March 1, 2009

தமிழ்’ஈன’த்தலைவனே... இதற்கு தானே ஆசைப் பட்டாய்...

”இந்த உயிர் இனி எப்போதும் உங்கள் உயிர்..”, ஆஹா.. எவ்வளவு உருக்கமாய் எழுத முடிகிறது உங்களால்.. அது சரி இத்தனை ஆண்டுகளாய் இப்படி எழுதித்தானே தமிழன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அது உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே..
ஆனால் பாவம்.. நீங்கள் .. இன்னும் முத்துக்குமாரின் மரணத்துக்கு முந்தைய ஏமாளி தமிழன் நினைப்பிலே இருந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..













உங்கள் தமிழினத் தலைவர் முகமூடியை தன் மரணசாசனத்தின் மூலம் கிழித்தெறிந்தான் எங்கள் தோழன் முத்துக்குமார். அதன் பிறகு போலி முகத்தை வெளியே காட்ட முடியாமல் மருத்துவமனையிலே பதுங்கிக்
கொண்டீர்கள். முத்துக்குமார் பற்ற வைத்த எழுச்சி தீயை அணைய விடாமல் போராட்டத்தை தீவிரப்படுத்திய வழக்கறிஞர்கள் வாயை அடைக்க வழி தேடிக்கொண்டிருந்த உங்களுக்கு கூமுட்டை சு.சாமி விவகாரம் சிக்கியது.
போதாதா..
உங்க ராசதந்திரத்தை பயன் படுத்த போலீஸ் நாய்களை கட்டவிழ்த்து விட்டீர்கள்...
அந்த நாய்களும் தங்கள் பரம்பரை பகையை தீர்த்துக்கொண்டன. வழக்கறிஞர்களும் இப்போது தங்கள் உரிமைக்காக போராட, ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் திசை திரும்பிடுச்சு.. உங்க ஆசையும் நிறைவேறிடுச்சு.. உணர்வுப்பூர்வமாக பேசி எழுச்சியை.. உண்டு பண்ணிக்கொண்டிருந்த சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டததில் கைது பண்ணியாச்சு.. இனிமே ஒரு பயலும் எதுவும் பேச மாட்டான்.. சாகட்டும் ஈழத்தமிழன்.. செத்து ஒழியட்டும்...
போதுமா.. இதற்கு தானே ஆசைப்பட்டாய்...

வெட்கமில்லாமல் நாங்களும் கோசம் போடுவோம்..
தமிழினத்தலைவன் வாழ்க...

1 comment:

  1. பாட்ஷா படத்தில் ஒரு வசனம் வரும். "நீயெல்லாம் ஒரு அப்பனா?" என்று நக்மா தன் தந்தையிடம் கேட்பார்.

    அதுக்கு அவர் சொல்லுவாரு, "நானா சொல்றேன், நீதான் சொல்லிக்கிற(அப்பன்னு)".

    இதே கதைதான். நம்மளா அவரைப் போயி "முத்தமிழ் அறிஞர்","தங்கத்தமிழர்","செம்மொழி கொண்டான்" என்று சொல்லிக்கொண்டு அலைந்தால் அதற்க்கு அவர் என்ன பண்ணுவார்?

    ஒன்னுமே பண்ணமாட்டார்.தான் ஒரு தமிழன் இல்லை என்பதை நிரூபிப்பார். அவ்வளவுதான்.

    ReplyDelete